புதன், 9 ஏப்ரல், 2014

விதவைகள் மறுமணம் செய்வதும் விதவைகளை திருமணம் செய்வதும் இந்துமத நெறி!!

கணவனை இழந்த பெண்களுக்கு இந்துக்கள் கொடுமைகளை செய்திருக்கின்றனர். இதைச் சுட்டிக்காட்டி இந்துமதத்தை பிற இனத்தவர்கள் இகழ்ந்தும் இருக்கிறார்கள். வக்கிரம் கொண்ட இந்துக்கள் சிலர் செய்த தவறு இந்த மதத்துக்கு அவப்பெயர் தந்தது. உண்மையில் கணவன இழந்த பெண்களுக்கு தேறுதல் தரும் நியாயத்தை தந்தது இந்துமதம்.

நமது அடிப்படை நூலான வேதத்தில் (அதர்வணம்) காண்டம் 13ல் கூறப்படுவது:

"பெண்ணே! உனது இறந்து போன கணவனைப் பற்றிய துயரத்தை விட்டுவிடு. அவனை மறந்து வாழும் உலகுக்கு வந்துவிடு. திரும்பவும் மணந்திடு. குழந்தைகளைப் பெற்றிடு.
தனது கணவனத் தொடர்ந்து மயானம் வரை சென்ற ஒரு பெண்ணை நான் திரும்ப கொண்டு வந்திருக்கிறேன். அவள் வருத்தத்தில் அழுது புலம்புகிறாள. ஆனால் நான் அவளை உலகிற்கு திரும்பவும் கொண்டு வந்து விட்டேன்"