புதன், 9 ஏப்ரல், 2014

ஆலயங்களில்

ஆலயங்களை மலைகள் மீதும், கடற்கரையிலும், மூலிகைகள் அடங்கிய சொலைப்பகுதிகளிலும், அருவிக்கரையிலும், ஆற்றங்கரையிலும் கட்டி இருக்கிறார்கள். இந்த இடங்களில் உள்ளத்தூயமையும் உடல் நலமும் கிட்டுகிறது. இதற்காகத்தான் ஆறுகால அபிசேகங்கள் தொடர்ச்சியாக செயல்பட்டு வருகின்றன. அர்ச்சனைகளும் ஆராதனைகளும் நடத்தப்படுகின்றன. இதன் விளைவாக விக்கிரத்தில் தொடர்ந்து அதிர்வுகள் நிலைத்திருக்கும். ஆலயத்தில் உள்ள கர்ப்பகிருகத்தின் அமைப்பு இதனை சேமித்துப் பாதுகாக்கும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கிறது. மூலவிக்கிரகம் ஒலி அலைகளின் எதிரொலியை எழுப்பவில்ல விதத்தில் அமைந்துள்ளது. அடியில் பொருத்தப்பட்டுள்ள எந்திரத்தகடு ஆற்றல சேமிப்புக்கலனாகவும் காற்று மண்டலம் அந்த சக்தியை ஏற்றிச் செல்லும் முறையிலும் முறையிலும் அமைந்துள்ளன. இதன் முழுப்பலனும் வழிபடவரும் பக்தர்களுக்கு போய்ச் சேர்கிறது. அவர்கள் இவற்றை ஏற்பவர்களாக (Receiver) விளங்குகிறார்கள்.
கர்ப்பக்கிருகத்தில் உள்ள காற்றுமண்டலத்தில் பிராணவாயு அழுத்தம் அதிகரிக்கிறது. அந்தக் காற்று மண்டலம் பிராணவாயுக் கூறுகளை அதிகமாக பெறுவதால் பதர்களின் உடல்நலம் சீர்பெற உதவும். ஒலியின் திசைவேகம் ஈரப்பததில் அதிகமாக இருக்கும். ஆகையால் எப்போதும் அபிசேக நீரினால் ஈரமாகவே உள்ள கர்ப்பக்கிருகம் இந்த நிலையை ஊக்குவிக்கும் விதமாக அமைந்துள்ளது.
ஆலயங்களின் அமைப்பும் அதன் உள்ளமப்பும் இவ்வாறு வேதாந்தபூர்வமகவும், விஞ்ஞானபூர்வமாகவும் கணிக்கப்பட்டே அமைந்திருக்கின்றன. இதனால் மனிதர்களுக்கு உடல்நலமும், உள்ளவளமும் கிடைக்கின்றது.